தனுஷ் பெயரை நீக்கியவுடன் ஐஸ்வர்யா போட்ட 'ஒத்த' போஸ்ட்: ஷாக்கான ரசிகர்கள்..!

அண்மையில் இசைஞானி இளையராஜாவின் ‘ராக் வித் ராஜா’ சென்னை தீவு திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தனது இரண்டு மகன்களுடன்
தனுஷ்
கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலானது. இந்நிலையில் தனது மகள்களுடன் இருப்பதை போன்று ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு நெட்டிசன்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு
யாத்ரா
,
லிங்கா
என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம் பாடல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதனை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், மற்ற மொழிகளில் மோகன்லால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

தனுஷ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வந்த வாழ்த்து செய்தி: குஷியில் ஐஸ்வர்யா..!

ஐஸ்வர்யாவின் ‘பயணி’ ஆல்பம் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்கள் தோழி என பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்திருந்தார் தனுஷ். அவரின் பதிவிற்கு ஐஸ்வர்யாவும் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)

அதில், என்னுடைய வயிற்றில் குழந்தைகளை இருக்கும்போது உதைத்தீர்கள். இப்போது என்னை நீங்கள் முத்தமிடுவதை ரசிக்கிறேன். இந்த அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் இருந்து தனுஷ் பெயரை நீக்கியவுடன் மகன்களுடன் இருப்பதை போன்று ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

உ பி யில் இருக்கும் வெறித்தனமான ரஜினி ரசிகர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.