தேர்தலில் தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதல்வராக தேர்வு

டேராடூன்

ட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி மீண்டும் உத்தரகாண்ட் முத்வல்ரவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.   இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட பிரேன் சிங் இன்று முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.   

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்ற போதும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்தார்.   இந்நிலையில் இன்று தலைநகர் டேராடூனில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையிலும் புஷ்கர் சிங் தாமி மீண்டும் முதவ்லராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.