21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம்

சென்னை:
21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, தமிழ்நாடு அரசு இ-சேவை முகமைக்கும்,

திண்டுக்கல் கோட்டாட்சியர் காசிச்செல்வி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பணிக்கும், புதுக்கோட்டை மாவட்டம் இலும்பூர், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி,

கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் கவிதா, சோழிங்கநல்லூர் உதவி ஆணையராகவும்,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், 21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.