குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் முன்பதிவு இன்றி செல்ல அனுமதி

கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 495 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி கேரளாவில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் விலக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு செல்ல முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

தற்போது அங்கு முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இனி கோவிலுக்கு முன்பதிவு செய்யாத பக்தர்களும் செல்லலாம் என கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யாத பக்தர்களும் கோவிலுக்கு வரலாம், ஆனால் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

இதனை தேவஸ்தான தலைவர் விஜயன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.