தமிழகத்தில் 50-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு- உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரே நாளில் 89 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 930 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால், கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது. மாநிலம் முழுவதும் 535 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்..
பேட்மிண்டன் தரவரிசை – முதல் 10 இடங்களில் இடம்பிடித்தார் லக்சயா சென்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.