பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலைக்கு பழி வாங்க கொடூரச் செயல்.. 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை..

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள், வீடுகளுக்கு தீவைத்து 10 பேரை உயிரோடு எரித்துக் கொலைசெய்தனர்.

அம்மாநிலத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள பக்டுய் என்ற கிராமத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவரான பது ஷேக் என்பவர் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள், தங்களுடைய எதிர்தரப்பினரின் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைத்தனர்.

இதனை அறிந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்ற நிலையில், சம்பவ இடத்திற்குள் நுழைய விடாமல் அந்த கும்பல் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் 10 உடல்கள் எரிந்தநிலையில் இருந்ததாகவும், அதில் ஏழு உடல்கள் ஒரே வீட்டில் இருந்து கண்டறியபட்டதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.