பாலியல் வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்.!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று விடுத்துள்ள அறிவிப்பில்,

“விருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த ஜுனைத் அகமது, கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அந்த அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக விருதுநகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

விருதுநகரில் ஆயத்த ஆடை  நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் தொழிலாளியை மாணவர்கள், திமுக கட்சிக்காரர்கள் உள்பட 8 பேர் ஆறு மாத காலம் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்து வந்த விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.