ஒன்னுல்ல இரண்டு: ஐஸ்வர்யா செம ஹேப்பி அண்ணாச்சி

காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் தன் கெரியரில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார். முசாபிர் எனும் காதல் பாடல் வீடியோவை இயக்கி வெளியிட்டார்.

இந்தி தவிர்த்து தமிழ், மலையாளம், தெலுங்கிலும் அந்த வீடியோ வெளியானது. இதையடுத்து
ஓ சாத்தி சல்
என்கிற இந்தி படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த படம் தவிர்த்து ராகவா லாரன்ஸின் துர்கா படத்தையும் இயக்கவிருக்கிறார்.

துர்கா படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இயக்குவதாக இருந்தது. டேட்ஸ் பிரச்சனையால் அவர்கள் படத்தில் இருந்து விலகிவிட்டனர். இதையடுத்து தன் தங்கை ஐஸ்வர்யாவை சந்தித்து துர்கா படத்தை இயக்குமாறு கேட்டுக் கொண்டார்
ராகவா லாரன்ஸ்
.

அவரும் உடனே சரி என்று கூறிவிட்டார். துர்கா படத்தை இயக்க காத்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ஒரு பாடல் வீடியோவை இயக்கலாம் என்று வந்த ஐஸ்வர்யாவை தேடி அடுத்தடுத்து இரண்டு பட வாய்ப்புகள் வந்திருப்பது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

தன் கெரியர் போகும் போக்கை பார்த்து ஐஸ்வர்யாவும் சந்தோஷத்தில் இருக்கிறார். 9 ஆண்டுகளாக சும்மா இருந்தவர் தற்போது பிசியாக இருப்பது பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.

குண்டை தூக்கிப் போட்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன்: சோகத்தில் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.