குடிக்க பணம் தர மறுத்த தாய்… மூர்க்கத்தனமாக மாறிய மகன்

மகாராஷ்டிராவில் மது வாங்க பணம் தர மறுத்த தாயை அவரது மகனே குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 70 வயதான தாயிடம் மது அருந்த அவரது மகன் ரூபேஷ் கங்கானி பணம் கேட்டுள்ளார். அவர் தாய் பணம் தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் தாய் என்றும் பார்க்காமல் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். அவரை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார் ரூபேஷ். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை துவங்கினர். தப்பி ஓடிய ரூபேஷ் கங்கானியை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
Can't police prevent a murder?
மகாராஷ்டிராவில் குற்றச் செய்திகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் முதியோர் கொல்லப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நேற்று இதே மகாராஷ்டிரா மாநிலத்தில் 56 வயதுடைய பெண் ஒருவர் அவரது மகன் மற்றும் மருமகளால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதும் குற்றவாளிகள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.