தனுஷும் அவரும் சேராததற்கு சிம்பு தான் காரணமா ?

சினிமா துறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் போட்டி நடிகர்கள் உருவாவது இயல்பான ஒன்றுதான். அவர்களுக்குள் போட்டி இல்லை என்றாலும் ரசிகர்கள் அவர்களை போட்டியாளர்களாகவே பார்ப்பார்கள்.

அவ்வாறு பார்க்கப்பட்டவர்கள் தான் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் மற்றும் அஜித். இவர்கள் வரிசையில் சிம்பு மற்றும்
தனுஷ்
இருவரும் போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டனர். சொல்லப்போனால் இவர்களுக்குள் போட்டி உண்டு என்பதை நடிகர் சிம்பு பலமுறை உறுதிசெய்துள்ளார்.

மேலும் ஒரு பிரிவை சந்திக்கும் தனுஷ் ? வருத்தத்தில் ரசிகர்கள்..!

சமகாலத்தில் அறிமுகமான இவர்களுக்குள் கடும் போட்டி நிலவிவந்தது மறுக்கமுடியாத உண்மை. மேலும் இவர்கள் இருவரும் எதிரி என்றே பலர் பேசிவந்தனர். அனால் சில மேடைகளில் எங்களுக்குள் போட்டி இருந்தது உண்மைதான் இருந்தாலும் நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றோம் என கூறினர்.

இந்நிலையில் இவர்களுக்குள் கடும் போட்டி நிலவி வந்தபோது சிம்பு சில காரியங்களை செய்ததாக சமூகத்தளங்களில் ஒரு தகவல் பரவிவருகின்றன. அதாவது நடிகர் சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு.

அதன் காரணமாக
சந்தானம்
நடிகர் சிம்புவின் மீது அளவுகடந்த மரியாதை வைத்துள்ளார். எனவே சிம்பு சொல்வதை மறுக்காமல் செய்யும் சந்தானத்தை தனுஷுடன் சேர்ந்து நடிக்கவிடாமல் சிம்பு தடுத்து வந்ததாக ஒரு தகவல் வந்துள்ளன.

பொல்லாதவன்
படத்திற்கு பிறகு தனுஷுடன் சந்தானம் சேர்ந்து நடித்ததில்லை. இதற்க்கு சிம்பு தான் காரணம் என சிலரால் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் சிம்புவிற்குள் போட்டி இருக்கும், ஒருபோதும் இதுபோன்ற காரியங்களை செய்யமாட்டார் என்று அவரது ரசிகர்கள் இத்தகவலை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்க கட்டிடம் சுற்றுலா தலமாக மாறும் – விஷால் பேச்சு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.