நடுரோட்டில் சென்ற பிச்சைக்காரர் மீது கார் ஏறியதில் பலி… டி.ஆரின் கார் ஓட்டுநர் கைது… பதைபதைக்க வைக்கும் வீடியோ….

நடுரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரர் மீது கார் ஏறியதில் பலியானார்.

கடந்த வெள்ளிக்கிழமை (18-3-2022) இளங்கோ சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக டி.ராஜேந்தரின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டிருக்கும் கார் ஓட்டுனரின் பெயர் செல்வம் என்பதும் இவர் இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்தரின் கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

விபத்தில் சிக்கிய பிச்சைக்காரரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான கைது செய்யப்பட்ட ஓட்டுநர் செல்வம் விசாரணைக்குப் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்ற காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.