நாகசைதன்யாவை 'அன்பாலோ' செய்த சமந்தா

தென்னிந்திய சினிமாவில் கடந்த வருடம் ஏற்பட்ட திருமணப் பிரிவுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட பிரிவாக சமந்தா, நாகசைதன்யா பிரிவு இருந்தது. சில பல வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள் அடுத்த சில வருடங்களிலேயே பிரிந்து போனார்கள்.

நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் சமந்தா. தற்போது இன்ஸ்டாவில் நாக சைதன்யாவை 'அன்பாலோ' செய்துவிட்டார் சமந்தா. ஆனாலும், நான்சைதன்யா சமந்தாவை தொடர்ந்து 'பாலோ' செய்து கொண்டு தான் இருக்கிறார்.

சமந்தா, நாகசைதன்யா பிரிவுக்குப் பிறகு இந்த ஆண்டு நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு பரபரப்பாகப் பேசப்பட்டது. நேற்று தன்னுடைய டுவிட்டர் தளத்தில் ஐஸ்வர்யா தனுஷ் என்று இருந்த பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றிவிட்டார் ஐஸ்வர்யா.

திருமண வாழ்க்கை முறிவுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வதும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.