"பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது" – எடப்பாடி பழனிசாமி

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் திமுக அரசின் கீழ் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விருதுநகரில் இளம்பெண்ணை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடுஞ்செய்தியை கேட்டு பெருவருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். கண் துடைப்பு கைது நடவடிக்கையாக மட்டுமல்லாமல், திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
image
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா? என கேள்வி எழுப்பியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.