பேருந்து அடியில் சிக்கிய கார்… உடல் நசுங்கிய மாணவர்கள்!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரை நோக்கி அரசு பேருந்தும், ஹாசனை நோக்கி காரும் சென்று கொண்டிருந்தன. மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முற்பட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஐந்து பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் பேலூர் வித்யா விகாஸ் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பேருந்து இருந்த 25 க்கும் மேற்பட்ட பயணிகளும் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகா, சங்கேனஹள்ளி கிராமம் அருகில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் அரசு பேருந்தின் அடியில் கார் சிக்கிக் கொண்டது.

துமகூரு மாவட்டம், பாவகடா அருகே சில தினங்களுக்கு முன் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் பலியாகினர். அந்த துயரம் மறைவதற்குள் அங்கு அடுத்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.