மட்டக்களப்பில் ,விசேட தேவையுடைய மாணவர்களின் ஆசிரியர்களுக்கு கலைக்கூறு பயிற்சி

விசேட தேவையுடைய கல்வி அலகுகளில் நிறுவனங்களில் மாணவர்களை வழிப்படுத்தும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கலைகூறு பயிற்சி நெறி,  செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சாரண பயிற்சியினை ஆரம்பிக்கும் முகமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூக சேவைகள் அபிவிருத்தி கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினர் இணைந்து நடத்திய இந்தஇரண்டு நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் , மாவட்ட சாரண ஆணையாளர் வீ.பிரதீபன் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.