மூலப்பொருள்களின் விலை உயர்வு எதிரொலி.. தீப்பெட்டி விலை உயர்வு

மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக வரும் 1ஆம் தேதி முதல் தீப்பெட்டி பண்டல் விலை 50 ரூபாய் உயர்வதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து மூலப்பொருள்களின் விலையும் கடந்த 3 மாதங்களில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகாரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக 600 தீப்பெட்டி கொண்ட ஒரு பண்டலின் விலையை 50 ரூபாய் உயர்த்த கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு தீப்பெட்டி பண்டல் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.