மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையின் சடலம்- தாய் கைது

புதுடெல்லி:
தெற்கு டெல்லியில் உள்ள சிராக் டில்லி பகுதியில் வசித்து வந்த டிம்பிள் என்ற 26 வயது பெண், சில நாட்களுக்கு முன் தனது 2 மாத பெண் குழந்தையை காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்துவதற்காக வீட்டிற்கு வந்தபோது குழந்தை கிடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக  பேசி உள்ளனர். இதையடுத்து, விசாரணை தீவிரமாக நடந்தது.
அப்போது குழந்தையின் உடலில் காயம் இருந்ததும், புகார் அளிப்பதற்கு முன்பே குழந்தை இறந்திருப்பதும் தெரியவந்தது. அதேசமயம் வீட்டின் முதல் தளத்தில் தாய் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும் குழந்தையின் உடல் மைக்ரோவேவ் ஓவனில் கிடைத்ததாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
பெண் குழந்ததை பிறந்ததை விரும்பாத டிம்பிள், தனது குழந்தையை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.