ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..எதற்கு தெரியுமா.?

உங்களில் ஒருவன் என்ற நூலைப் படித்துவிட்டு தொலைபேசியில் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற புத்தகம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்த புத்தகத்தை படித்து விட்டு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ” ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தைப் படித்துவிட்டு தொலைபேசியில் பாராட்டிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!

உங்களது வாழ்வின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.