1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலை



1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார மந்த நிலை இது  என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

விழா ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கணடவாறு குறிப்பிட்டார். 

கோவிட் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.  உலகளாவிய பணவீக்கம் இன்று அதிகரித்து, எம்மைப் போன்ற சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோவிட் தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயர்ந்த எண்ணம் கொண்ட அமெரிக்கர்கள் ஜனாதிபதி ஜோ பைடனை இராஜினாமா செய்யச் சொல்ல மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.