இரண்டாவது மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு

அஞ்செட்டி அருகே இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவன் போலீசாருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள மேல்கொச்சாவூர் மலை கிராமத்தில் வசிப்பவர் பசப்பா (35) கூலி தொழிலாளியான இவர், தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்துவந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மாதேவி (32) என்பவருடன் பசப்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை திருமணம் செய்து கொண்ட பசப்பா கடந்த நான்கு மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
image
இந்நிலையில் மாதேவி மீது சந்தேகமடைந்த பசப்பா அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பசப்பா மாதேவியை கொலை செய்து தப்பி ஓடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாதேவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
இதைத் தொடர்ந்து கொலை செய்து விட்டு தலைமறைவான பசப்பாவை போலீசார் தேடி வந்த நிலையில், எப்படியாவது தன்னை பிடித்து விடுவார்கள் என்ற பீதியில் மேல்கொச்சாவூர் வனப்பகுதியில் உள்ள கொய்யா மரத்தில் பசப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடம் சென்று பசப்பாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.