இலங்கையிலிருந்து தமிழ்நாடு வருவோர் மீது வழக்கு பதியக்கூடாது: வி.சி.க-வின் வன்னி அரசு

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வருவோர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கேட்டுக் கொண்டுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், முன்பு சிங்கள இனஒடுக்குமுறையைப் போலவே, இப்போதும் தமிழர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனால், தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களை ஏற்கனவே உள்ள முகாம்களுக்கு அனுப்பாமல் தனி முகாம் அமைக்க வேண்டும் என்றும் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.