உலகளவில் வீதியில் இறங்கி போராடுமாறு அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக உலகளவில் வீதியில் இறங்கி போராடுமாறு அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைனுக்காகவும், உக்ரைனின் சுதந்திரத்திற்காகவும் உலக நாடுகளின் அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் உலக நாடுகள் உக்ரைன் பக்கம் இருப்பதை ரஷ்யாவுக்கு உணர்த்த வேண்டும் எனவும், பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், அலுவலகங்களில் இருந்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.