ஐபிஎல் ஆரம்பத்திலேயே CSK அணிக்கு பெரும் ஏமாற்றம்! என்ன செய்ய போகிறார் தோனி?



ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் போட்டி வரும் 26ஆம் திகதி தொடங்குகிறது.
இந்த சூழலில் தான் சிஎஸ்கேவுக்கு தொடக்கமே பின்னடைவாக சென்றது. தீபக் சஹார் மீது அதீத நம்பிக்கை வைத்து ரூ.14 கோடிக்கு எடுக்கச்சொன்னார் தோனி.

ஆனால் காயம் காரணமாக அவரால் முதல் பாதி தொடரில் விளையாட முடியாது என அறிவிப்பு வெளியானது.
அவருக்கு மாற்று வீரரை முதலில் தேடினார்.
அதே போல அணியில் ஷர்துல் தாக்கூர் இல்லை. எனவே மும்பை களத்தில் நல்ல வேகமாக பந்துவீசக்கூடிய பவுலராக டுவைன் பிரிட்டோரியஸை தேர்வு செய்தார்.

இந்த சூழலில் தான், பிரிட்டோரியஸ் இன்னும் இந்தியா வரவில்லை. வங்கதேசத்துடனான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதனை முடித்துவிட்டு நாளைய தினம் பிரிட்டோரியஸ் இந்தியா வந்தாலும், 3 நாட்கள் குவாரண்டைன் செய்ய வேண்டும்.

இதனால் அவரால் மார்ச் 26ல் நடைபெறும் கொல்கத்தாவுடனான முதல் லீக் போட்டியில் பங்கேற்க முடியாது.
பல குழப்பங்களுக்கு இடையே ருதுராஜ் கெயிக்வாட் சிஎஸ்கேவுக்கு வந்துவிட்டார்.

ஆனால் தோனியின் நம்பிக்கை நாயகன் மொயீன் அலி வரவில்லை. விசா பிரச்சினை காரணமாக அவர் தாமதமாக தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார்.
இப்படி மூன்று முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடக்கத்தில் சென்னை அணியுடன் இணையமாட்டார்கள் என்பதால் இதை தோனி எப்படி சமாளிப்பார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.