சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு

சிதம்பரம் நகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாத காலத்திற்கு தடைவிதித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய ஏற்கெனவே முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு பல்வேறு பிரச்னைகள் காரணமாக கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்து தடைவிதித்தனர். இதனால் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனைவருக்கும் அனுமதிக்க வழங்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் கோயிலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
image
இந்நிலையில் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், இதர போராட்டக் குழுவினர் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த தடைவிதித்து 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கனகசபை மேல் ஏறி தரிசனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருவதாக கோட்டாட்சியர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த பிரச்னை அரசு பரிசீலனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதால் அரசின் முடிவு வரும்வரை கடலூர் சிதம்பரம் கோயிலில் இன்று முதல் ஒருமாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் ரவி ஆணை வெளியிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.