தமிழகத்தில் 500 க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்…!

ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களாக ராம் சரண் மற்றும் ஜூனியர்
என்.டி.ஆர்
நடிப்பில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

டிவிவி தானய்யா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக அஜய் தேவ்கனும், கதாநாயகியாக ஆலியா பட்டும்நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

நீண்டநாள் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த மஹா திரைப்படம் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியிடு…!

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை
லைக்கா
நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 550 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. டப்பிங் செய்யப்பட்ட படம் இன்று தமிழகத்தில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்
ராஜமௌலி
இயக்கத்தில் வெளியான
பாகுபலி
2 திரைப்படம் 400 திரையரங்குகளில் வெளியானது. எனவே ஆர்ஆர்ஆர் திரைப்படம் பாகுபலியை விட 150 திரையரங்குகள் அதிகமாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி படத்திற்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் பிரம்மாண்ட படம் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாளை இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில்வெளியாகிறது. படம் வெளியாவதற்கு முன்பே படம் பல ரெக்கார்டுகளை முறியடித்துள்ளது. படம் வெளியானதும் வசூலில் புயல் கிளப்பும் என்பது உறுதி.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.