பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு, கழனி வாசல் உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணியிலிருந்து மின்சாரம் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை காலை 9 மணியிலிருந்து மின்சாரம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மங்கலமேடு, கழனிவாசல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மங்கலமேடு, தேவையூர், வாலிகண்டபுரம், குன்னம், வரகூர், சின்னாறு, பெருமத்தூர், பரவாய், பொன்னகரம், கிளியூர், நன்னை, எழும்பூர், வேப்பூர், அயன்பேரையூர், வைத்தியநாதபுரம், திருமாந்துறை, டி.கீரனூர், வி.களத்தூர், சு.ஆடுதுறை, கல்லம்புதூர், ஒகலூர், அந்தூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.