மறைந்த ஆனந்த கண்ணன் மனைவியின் எமோஷனல் பதிவு: கலங்கும் ரசிகர்கள்..!

சன் டிவியில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் ஆனந்த கண்ணன். சமீபத்தில் புற்றுநோயால் இவர் மறைந்த சம்பவம் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இந்நிலையில்
ஆனந்த கண்ணன்
மறைவிற்கு பிறகு அவருடைய பிறந்த நாளில் அவரது மனைவி பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

சிங்கப்பூரை சேர்ந்த ஆனந்த கண்ணன் சன் மியூசிக் சேனலில் பிரபல தொகுப்பாளராக பணிபுரிந்தார். அதன் பின் அவர் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். மேலும் தான் கற்ற பாரம்பரிய கலைகளை மேடை நாடகங்கள் மற்றும் தெருக்கூத்து மூலமும் பரப்பி வந்தார். மேலும் பலருக்கு அந்த கலைகளை கற்று கொடுத்தும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் திடீரென குடல் புற்றுநோய் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த கண்ணன் மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களுக்கும், சின்னத்திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இனிமே அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை: ரசிகர்களின் ஆசையை சுக்கு நூறாய் உடைத்த ஐஸ்வர்யா.!

இந்நிலையில் சமீபத்தில் ஆனந்த கண்ணன் பிறந்த நாள் வந்ததை அடுத்து அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’என்னுடைய அன்பான அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார். அவரின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram A post shared by Rani Kanna Storyteller (@rani_kanna)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.