யார் பெரியவர் என்ற கோஷ்டி மோதலில் இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியோடிய கும்பல்

கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரியில், முன்விரோதம் காரணமாக இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய 4 பேர் கும்பலை போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்தனர்.

செவ்வாய் இரவு கண்ணப்பன் நகரைச் சேர்ந்த காட்ஸன் என்ற இளைஞரை 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காட்ஸனை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், காந்திபுரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 4 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது, கண்ணப்பன் நகரில் யார் பெரியவர் என்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் காட்ஸனை வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.