ரஜினிகாந்தின் ஒவ்வொரு சொல்லும் ஊக்கத்தை தருகிறது’ நன்றி கூறிய ஸ்டாலின்

Tamilnadu CM Stalin Thanks To Rajinikanth : ஒருவன் நூலை படித்துவிட்டு போனில் தொடர்புகொண்டு பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்க்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நூலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். இந்த புத்தகத்தில், பள்ளி கல்லூரி வாழ்க்கை, இளமை பருவம். அரசியல் தொடக்கம், திருமண வாழ்க்கை மிசா போராட்டம் உள்ளிட்ட தனது வாழ்வின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில், மற்ற மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், மற்றும் திரைத்துரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்றனர். இந்நிலையில், தற்போது இந்த நூலை படித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.  

ரஜினிகாந்தின் இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்களில் ஒருவன்’ படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி! உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது! என்று பதிவிட்டு்ளளார்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.