ரஷ்யா -இந்தியா வர்த்தகம்: ராஜ்யசபாவில் ஜெய்சங்கர் விளக்கம்| Dinamalar

புதுடில்லி: ரஷ்யா -இந்தியா இடையிலான வர்த்தகம் குறித்து ராஜ்யசபா கூட்டத்தில் ஜெய்சங்கர் விளக்கியுள்ளார்.

ராஜ்யசபாவில் ,மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி பதில் நேரத்தில் பேசிய போது, மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் ரஷ்யாவிடம் ஒரு சதவீதத்திற்கும் குறைவான கச்சா எண்ணெய் மட்டுமே இந்தியா வாங்கி வருகிறது.

தற்போது போர் காரணமாக ரஷ்யாஇந்தியா பணப் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மத்திய நிதி அமைச்சகம் இது குறித்து முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தி சுமூக வர்த்தகம் நடைபெற ஆவன செய்யும் எனக்கூறினார்.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்ய கரன்சி ஆன ருபெல் மூலமாகவே ஐரோப்பிய யூனியன் நாடுகள் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்தியா உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை எதிர்க்காமல் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.