விருதுநகர் : பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு..!

விருதுநகரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் சிபி சிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் உத்தரவிட்டார்.

 அதன்பேரில், இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் காவல் துறையிடமிருந்து சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கண்காணிக்க உள்ளார்.

இந்நிலையில் கைதானவர்களில் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அட உள்ளதால் விசாரணை விரைவாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.