வேளாண் துறையில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை உருவாக்கும்-அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

வேளாண் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை உருவாக்கும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கி அவர் பேசினார். இப்போது 10 மாத குழந்தையாக உள்ள திமுக அரசு, 10 ஆண்டுகாலத்துக்குப் பின் வளரும் போது விவசாயிகள் எங்குமே கடன் கேட்டு நிற்க மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர் தரப்பினரின் கருத்து சிறந்ததாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசு தான் திமுக அரசு என்றும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.