Dhanush:ஐஸ்வர்யா விஷயத்தில் நினைத்ததை சாதித்த தனுஷ்

ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும், தனுஷும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் முயற்சி செய்தார்கள்.

இருப்பினும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இனியும் என்னால் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது. நான் இப்போ தான் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கேன்பா என்று தன் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் தெரிவித்தாராம்
தனுஷ்
.

தயவு செய்து என்னை மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்யாதீர்கள் அப்பா என்றாராம். இதற்கிடையே தனுஷுடன் மீண்டும் சேர முயற்சி செய்து தோல்வி அடைந்துவிட்டார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் தான் ஐஸ்வர்யா இயக்கிய பயணி வீடியோவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்த தனுஷ், தோழி என்கிற வார்த்தையை பயன்படுத்தினார். அதை பார்த்து கடுப்பாகித் தான் இனி தனுஷுடன் சேரவேக் கூடாது என்று ஐஸ்வர்யா முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

எது எப்படியோ, ஐஸ்வர்யாவை பாராட்டியதும் ஆச்சு, நினைத்ததை சாதித்ததும் ஆச்சு என்று தனுஷ் தற்போது சந்தோஷமாக இருக்கிறாராம்.

மாஜி அண்ணியுடன் தனுஷ் நெருக்கம்: விளாசும் நெட்டிசன்ஸ்
இனி யாரையும் திருமணமே செய்யக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறாராம் தனுஷ். இதற்கிடையே அவர் சோனியா அகர்வாலுடன் சேர்ந்து எடுத்த பழைய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.