Dhanush:விபரீதத்தில் முடிந்த ஐஸ்வர்யா, தனுஷ் டீல்

காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் செய்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

மகளை எப்படியாவது தனுஷுடன் சேர்த்து வைத்துவிடலாம் என்று முயற்சி செய்து சோகத்தில் இருக்கிறார் ரஜினி. பிரிவுக்கு பிறகு தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒரு டீல் போட்டார்களாம்.

அதாவது நான் பிசியாக இருக்கும்போது நீங்கள் மகன்கள் யாத்ரா, லிங்காவை பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போன்று நீங்கள் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தனுஷிடம் கூறினாராம் ஐஸ்வர்யா.

அதற்கு தனுஷும் சம்மதித்தாராம். இந்நிலையில் ஐஸ்வர்யா தன் கெரியரில் பிசியாக இருக்க, மகன்களுடன் நேரம் செலவிடுகிறார்
தனுஷ்
.

பிள்ளைகளை இளையராஜா நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். முன்னதாக மூத்த மகன் யாத்ராவை ஊட்டிக்கு அழைத்துச் சென்றார். இதை எல்லாம் பார்த்தவர்கள் தனுஷ் தான் மகன்கள் மீது பாசமாக இருக்கிறார் என்று பேசத் துவங்கினார்கள்.

ஆட்டத்தை மாத்தி ஆடும் தனுஷ்: ஆடிப் போன லதா?
மேலும் அப்பாவுடன் இருப்பது தான் ஜாலியாக இருக்கிறது. அம்மா போர். அதனால் நாங்கள் அப்பாவுடனேயே இருந்துவிடுகிறோம் என யாத்ராவும், லிங்காவும் கூறியதாக தகவல் வெளியானது.

இதையடுத்தே மகன்களை தனக்கு முத்தம் கொடுக்க வைத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டாராம் ஐஸ்வர்யா. டீல் படி மகன்களை தனுஷுடன் அனுப்பியது இப்படி தனக்கு எதிராக திரும்பும் என்று ஐஸ்வர்யா நினைக்கவில்லையாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.