அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகள் அசைவ உணவகங்களிலும் நிறுத்தலாம்! போக்குவரத்து துறை புதிய உத்தரவு…

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகம் உணவு இடைவேளைக்காக இடைநிறுத்தம் தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பில், சைவ உணவகத்தில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என கூறியதுடன், அதற்கான டெண்டரையும் கோரியது.  இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது சைவம் என்ற வார்த்தை அகற்றப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பில் நீண்ட தூரம் பயணிகக்கும் பயணிகளின் உணவு இடைவேளைக்கு சாலையோர உணவகங்களில் நிறுத்தப்படுவது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பல்வேறு அதிரடி நடவடிக்கைள் எடுத்தனர். தொடர்ந்து, எந்ததெந்த உணவகங்களிலும் நிறுத்த வேண்டும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டது.

ஆனால்,அதிலும் சில சிக்கல்கள் எழுந்த நிலையில், தொலைதூர பேருந்துகள் இடைவேளைக்காக நிறுத்தும் உணவகத்திற்க்கான டென்டரை கட்டுப்பாடுகளுடன் வெளியிட்டது.  அதிதில் சைவ உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று கோரியது.  மேலும், அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது, உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல், சிசிடிவி பொருத்துதல், உணவகங்களில் இலவச கழிப்பிட வசதி உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

உணவகங்களில் சைவ உணவுதான் தயார் என்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு சலசலப்பை ஏற்படுத்தியது. பயணிகளும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, சைவ உணவு என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் அசைவ உணவகங்களிலும் நிறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் உள்ள அசைவ உணவகங்களிலும் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  அத்துடன், அரசுப் பேருந்துகளின் நிறுத்துவதற்கான டெண்டரில் சைவ உணவகங்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையும் மாற்றப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் இடைநிறுத்தம் உணவகத்திற்கான டெண்டர் வெளியீடு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.