இந்தியா – சீன வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

புதுடில்லி: நேற்று இரவு டில்லி வந்த சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார்.

கிழக்கு லடாக்கில், 2020 மே மாதத்தில் இருந்து இந்தியா, சீனா படைகள் இடையே மோதல் போக்கு உள்ளது. இரு நாட்டுப் படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல சுற்று பேச்சு நடந்தும், படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, திடீர் பயணமாக நேற்று டில்லி வந்தார். இன்று காலை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். பின்னர், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, வாங் யீ சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.