சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைப்பதில்லை என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை.!

நாமக்கல்லில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது பேசிய விவசாயிகள் ராசிபுரம், வெண்ணந்தூர், எருமப்பட்டி பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதாகவும் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டும், உரிய விலை கிடைக்காமல் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு வாங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சின்ன வெங்காயத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.