தோனியை போன்ற கேப்டனை பெற சென்னை அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்- சேவாக் புகழாரம்

மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் நாளை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நேற்று விலகினார். இதையடுத்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டது தோனியின் முடிவு அணி நிர்வாகம் தெரிவித்தது.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சேவாக் ” தோனியை போன்ற கேப்டனை பெற சென்னை அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அதற்கு ஈடாக சென்னை ரசிகர்களிடமிருந்து அவர் பெற்றுள்ள அன்பு மகத்தானது. சென்னை மற்றும் தோனிக்கு இடையில் தொடரப்போகும் உறவு வெகு சிலருக்கே அமையும் ” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.