பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும்- ஏ.கே.மூர்த்தி பேட்டி

தாம்பரம்:

பா.ம.க. சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம் தொகுதிக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டம் பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜே.எம்.சேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டார்.

பின்னர் ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ம.க.வில் பொறுப்புகளை பெற அதிக ஆர்வம் காட்டி உள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளில் பொறுப்புகளை பெற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பா.ம.க.வினர் கட்சி பொறுப்புகளுக்கு வர அதிகமானோர் முன் வந்துள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும். டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்காக கட்சி பலப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.