பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்ட எந்த கடவுளும் கேட்பதில்லை – உயர்நீதிமன்றம்

பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளது.

நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவிலின் சார்பில் சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், கோவில் நிர்வாகத்திற்கு எதிராக நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொது பாதையில் கோவில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை இரு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், கோவில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.