ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனியாக விடப்படவில்லை.. துணை நிற்பதாக போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனியாக விடப்படவில்லை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேட்டோ மாநாட்டில் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார். 

நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் நேட்டோ மற்றும் ஜி 7 நாடுகளின் மாநாடு நடைபெற்றது, இதில் பங்கேற்று பேசிய போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு உதவ இதர நாடுகளுடன் இணைந்து செயல்திட்டம் வகுக்கப்படும் என்று கூறினார்.

உக்ரைனுக்கு 6 ஆயிரம் ஏவுகணைகள் வழங்கவும் பிரிட்டன் பிரதமர் உறுதியளித்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த ஆயிரம் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.