Dhanush:செல்வராகவன் மனைவி தோள் மீது கை போட்ட தனுஷ்: சோ வாட்?

தனுஷும், அவரின் முன்னாள் அண்ணியான சோனியா அகர்வாலும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள், தனுஷை விளாசத் துவங்கிவிட்டார்கள்.

மாஜி அண்ணியுடன் தனுஷ் நெருக்கம்: விளாசும் நெட்டிசன்ஸ்
அது பழைய புகைப்படம் என்று கூட பார்க்காமல்,
தனுஷ்
என்பதால் கண்மூடித்தனமாக திட்டுவது சரியில்லை என்றார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் தோள் மீது கை போட்டு தனுஷ் நிற்கும் புகைப்படம் பற்றி விமர்சிக்கிறார்கள். அண்ணி தோள் மீது கை, இந்த தனுஷ் திருந்தவே மாட்டார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

அதற்கு தனுஷ் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

அண்ணியை தாயாக பார்க்கிறார் தனுஷ். அதனால் அம்மாவின் தோள் மீது கை போடுவதில் தவறு இல்லை. தனுஷ் என்பதற்காக அவரை கண்டபடி விமர்சிக்க வேண்டாம்.

மேலும் மாடர்ன் யுகத்தில் தோள் மீது கை போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது எல்லாம் சர்வ சாதாரணம். எங்கள் அண்ணனை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்கிறார்கள்.

காதல் மனைவியான ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு ஷூட்டிங் இல்லாத நாட்களில் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் நேரம் செலவிடுகிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.