ஆஸ்கார் நாயகன் இசையில் பாடிய சுந்தரி கேப்ரில்லா: இது எவ்வளவு பெருமை தெரியுமா?

சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி தற்போது சன்டியின் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருபவர் கேப்ரியல்லா. சன்டிவியின் சுந்தரி சீரியலில் நடித்து வரும் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் அடுக்கடுக்காக கிடைத்து வருகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்ரியல்லாவை பின் தொடர்ந்தது பெரிய வைரலாக பரவியது.

இந்நிலையில் தற்போது ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இசை ஆல்பத்தில் கேப்ரியல்லா பாடல் பாடியுள்ளார். தமிழன்னனைக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் முப்பில்லா தமிழ் தாயே என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். தமிழக மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலைத்தான் கேப்ரியல்லா பாடியுள்ளார்.

நடிப்பின் மீது தீராத காதல் கொண்ட கேப்ரியல்லா பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் ஒரு சில பாடல்களை பாடியுள்ள அவர், இந்த பாடலில் ஒரு சிறு ராப் போஷனை பாடியுள்ளார். இதன் மூலம் பாடல் உருவாக்கதிற்கு காரணமாக பெயர் பட்டியலில் கேப்ரியல்லா இடம்பெற்றுள்ளார்.

இது தொடர்பாக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கேப்ரியல்லா, இந்த பாடலில் நானும் ஒரு அங்கமான இருப்பதை எனக்கு கி்டைத்த வரமாக நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவருக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 “ “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.