இந்தியாவில் புதிதாக 1,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்றே குறைந்து ஆயிரத்து 660 ஆக பதிவாகி உள்ளது.

ஒரு நாள் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 100 ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கொரோனாவுக்கு பிந்தைய உயிரிழப்புகளையும் சேர்த்து மகாராஷ்டிரா மாநிலம் புதிதாக 4005 உயிரிழப்புகளையும், கேரள மாநிலம் 79 உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளது.

24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 349 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 25 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 16 ஆயிரத்து 741 பேர்  சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.