உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவின் 7 ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல்.!

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவின் 7 ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை எட்டியது. போரில் ரஷ்யாவுக்கு பெருத்த சேதங்கள் ஏற்பட்டதாகவும், 7 ராணுவத் தளபதிகள் இதுவரை கொல்லப்பட்டதாகவும் மேற்கு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உளவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போரில் தங்கள் தரப்பில் ஆயிரத்து 300 வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்யக் கிரம்ளின் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம் என மேற்கு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

படைகளை முறையாக வழிநடத்தவில்லை என 37-வது படைப்பிரிவுன் தலைவர், அவரது சொந்தப் படைகளாலே கொல்லப்பட்டதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.