ஏப்ரல் முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது.!

டெல்லி: ஏப்ரல் மாதம் முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டியராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகின்ற ஏப்ரல் மாதம் 1 தேதி  முதல் 10.7 சதவீதம் உயர்கிறது. இந்நிலையில் திட்டமிடப்பட்ட மருந்துகளில் 10.7% விலையை உயர்த்தலாம் என்று இந்திய தேசிய மருந்துகள் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதுவே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலை ஆகும். இதனால் தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலிலுள்ள 800 க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை வருகின்ற ஏப்ரல் மாதம் 1 தேதி வரை உயரும். தேசிய அத்தியாவச மருந்து பட்டியலில் பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்த சோதை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமீன்கள் மற்றும் தாதுக்கள் போன்ற மருந்துகள் அடங்கும். மேலும், கொரோனா தொற்று மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பயன் படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.