சவுதி எண்ணெய் கிடங்கு மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்| Dinamalar

ஜெட்டா-மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது, ஏமனின் ஹவுதி பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்திஉள்ளனர்

.ஏமனில் அரசுப் படைகளுக்கும், ஹவுதி பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், ஏமன் படைகளுக்கு, சவுதி அரேபியா ஆதரவு அளித்து உதவி செய்து வருகிறது. அதே நேரத்தில் ஹவுதி பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து உள்ளது.

சமீபத்தில், சவுதி அரேபியா ஏமனில் வான்வழி தாக்குதல் நடத்தி, ஹவுதி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடியாக, சவுதி அரேபியா மீது, ஹவுதி பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.ஜெட்டா நகரில் உள்ள முக்கிய எண்ணெய் கிடங்கின் மீது, ஹவுதி பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதலை நடத்தியதால், அந்த எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.