சென்னையில் நெசவுத் தொழிலாளி மீது மினிலாரி ஏறி உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் கைது.!

சென்னை அடுத்த குன்றத்தூரில் நெசவுத் தொழிலாளி மீது மினிலாரி ஏறி உயிரிழந்த சம்பவத்தில் டிரைவரை கைது செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

மின்வாரிய அலுவலகம் உள்ள சாலையில் திரும்பிய நெசவுத் தொழிலாளி மூர்த்தியின் இரு சக்கர வாகனம் மீது பின்னால் வந்த மினி லாரி உரசியதில் நிலைத் தடுமாறி சாலையில் விழுந்தார்.

மறுகணம் மினி லாரி மூர்த்தின் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும் முதற்கட்டமாக மினி லாரி ஓட்டுநர் சேகர் என்பவரி கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.      

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.