#சென்னை || திரைப்பட பாணியில் அரங்கேறிய ஆள் கடத்தல் சம்பவம்.! விரட்டி பிடித்த போலீசார்.!

பண மோசடி செய்த நபரை காரில் கடத்தி சென்ற 6 பேரை, அதிரடியாக மடக்கி பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை : விருகம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்து, அவரைத் தாக்கிய பின் கார் ஒன்றில் கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, விரைந்து செயல்பட்டு அம்பத்தூர் அருகே அந்த காரை வழிமறித்து கடத்தி செல்லப்பட்ட ரவி என்பவரை மீட்டனர்.

இருவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில், 6 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், ரவி என்பவர் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வீட்டை, நசுருதீன் என்பவருக்கு 8 லட்சம் ரூபாய்க்கும், அசனஸ்  என்பவருக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கும் லீசுக்கு கொடுத்துள்ளார்.

அந்தப் பணத்தை அபகரித்துக் கொண்டது தெரியவந்தத இருவரும், வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று, அந்த வீட்டுக்கு உரிமையாளரான தொண்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், ரவி மீது அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், நசுருதின் மற்றும் அசனஸ் கூறியதன் பேரில், சுனில் என்பவன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து ரவியை கடத்தியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.