தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மார்ச் 28 அன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும், மார்ச் 29 அன்று உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கோவை சூலூரில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.